மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் வீசிய சூறை காற்றில் விழுந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணி நடந்தது.மூங்கில்துறைப்பட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன் சூறை காற்றுடன் பெய்த மழையில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அன்று இரவே, மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்றுப்பாதையில் மின் சப்ளை கொடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நான்கு இடத்தில் முறிந்த மின்கம்பங்களை மாற்றும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இப்பணியும் நிறைவடைந்து தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE