மரக்காணம்; கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் படுகாயமடைந்தனர்.மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பன்னீர், 36; ரமேஷ், 38; இருவரும் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.அப்போது ஏற்பட்ட அலையின் சீற்றத்தால் படகு கவிழ்ந்தது. இதில், இருவரும் காயமடைந்தனர். உடன் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சக மீனவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவிழ்ந்த படகை மற்றொரு படகில் கயிற்றால் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE