விருகம்பாக்கம் : தம்பி சாவுக்கு காரணம் என நினைத்து, வாலிபரை வெட்டிக் கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்; தலைமறைவாக உள்ள, ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
விருகம்பாக்கம், நடேசன் நகர், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., குடியிருப்பு வளாகத்திற்கு அருகே உள்ள காலி இடத்தில், வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது.விருகம்பாக்கம் போலீசார், வாலிபர் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்த வாலிபர், வடபழனி, குமரன் காலனியைச் சேர்ந்த ரமேஷ், 25, என, தெரியவந்தது. இவர், பல்வேறு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றவர். ரமேஷின் கூட்டாளி, விஜய் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.இதில், ஏப்., 12ல், ரமேஷ், தன் மூன்று நண்பர்களுடன், செம்மஞ்சேரி ஏரியில் குளிக்க சென்றார்.
அப்போது, அஜித் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அஜித்தின் சாவிற்கு, ரமேஷ் தான் முக்கிய காரணம் என நினைத்த, அஜித்தின் அண்ணன் தேவா, ரமேஷை தீர்த்துக்கட்ட, அஜித்தின் நபண்பர்களை துாண்டியுள்ளார்.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, ரமேஷை மது அருந்த அழைத்து சென்று, போதை தலைக்கேறியதும், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.இதில், விஜயை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, பாபு, 20, சஞ்சய், 20, உள்ளிட்ட ஐந்து பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE