சென்னை : துணைவேந்தர் ஓய்வு பெறுவதால், சென்னை பல்கலையின் நிர்வாகத்துக்கு, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையின் துணைவேந்தராக உள்ள, பேராசிரியர் துரைசாமியின் பதவிக்காலம், வரும், 26ம் தேதி முடிகிறது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, கவர்னர் சார்பில் தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, பல்கலை நிர்வாகங்களை கவனிக்க, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு சிண்டிகேட் கூட்டம், துணைவேந்தர் துரைசாமி தலைமையில், நேற்று சென்னை பல்கலை வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், குழு ஒருங்கிணைப்பாளராக, உயர்கல்வித்துறை முதன்மை செயலர், அபூர்வா தேர்வு செய்யப்பட்டார்.
பல்கலை பிரதிநிதியாக, இந்திய வரலாற்று துறை தலைவர் சுந்தரம், தேர்தல் வழியாக தேர்வு செய்யப்பட்டார்.கல்லுாரிகள் தரப்பில், சிண்டிகேட் உறுப்பினர், லலிதா பாலகிருஷ்ணன்; அரசின் பிரதிநிதியாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர், விவேகானந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த குழுவினர், 27ம் தேதி முதல், சென்னை பல்கலை நிர்வாகத்தை கவனிப்பர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE