மதுரை "மதுரை மக்களின் குடிநீருக்காக மே 25ல் வைகை அணை திறக்கப்படுகிறது. இதனால் தினமும் கூடுதலாக 20 எம்.எல்.டி., குடிநீர் கிடைக்கும்.முத்துப்பட்டி குடிசைப்பகுதியினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடியை கமிஷனர் விசாகன் தலைமையில் அமைச்சர் செல்லுார் ராஜூ வழங்கினார்.பின் அவர் கூறியதாவது: வைகை அணை திறப்பதால் இரு மாதங்களுக்கு மதுரையில் பற்றாக்குறை இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும், என்றார்.நகர் பொறியாளர் அரசு, உதவி கமிஷனர் மணியன், உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, பி.ஆர்.ஓ., சித்திரவேல், செயற்பொறியாளர் முருகேச பாண்டியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE