மதுரை அகவிலைப்படி ரத்து உத்தரவை திரும்ப பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன்சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் அழகுராஜா தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ரபீக், உதவி செயலாளர் ராம்குமார் கோரிக்கைகளை விளக்கினர். நிர்வாகிகள் தாமரை செல்வன், பேச்சிமுத்து, நாகராஜ் பாபு, வெங்கடேஸ்வரன், கருப்பையா, வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வடக்கு வெளி வீதி தலைமை தபால் நிலையத்தில் எப்.என்.பி.ஒ., ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE