கோவை:சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த, ஆட்டோ டிரைவர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.கோவை, தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்,26; ஆட்டோ டிரைவர். வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். கர்ப்பமான சிறுமிக்கு, அரசு மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது. கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர். சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்த, தமிழ்செல்வனை கடந்த ஏப்., 3ல், கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஜாமினில் விடக்கோரி, ஆன்லைன் வாயிலாக, தமிழ்செல்வன் மனு தாக்கல் செய்தார். போக்சோ சிறப்பு கோர்ட் நீதிபதி ராதிகா விசாரித்து, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE