கோவை:தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை திரும்ப பெறக்கோரி, நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.'அகவிலைப்படி ரத்து, சரண்டர் ரத்து, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பு ஆகிய அரசு பணியாளர்களின் உரிமை பறிப்பு நடவடிக்கைகள் திரும்ப பெற வேண்டும். எட்டு மணி நேர வேலை எனும் போராடி பெற்ற உரிமையை, 12 மணி நேரமாக அதிகரிப்பதை கைவிட வேண்டும். பொது முடக்க காலத்தில் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்.கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்...' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE