கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு ஜாமின் மனுவை, மகளிர் கோர்ட் நீதிபதி டிஸ்மிஸ் செய்தார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த கல்லுாரி மாணவிகள் பலரை, மிரட்டி பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த வழக்கில் திருநாவுக்கரசு,29, சபரிராஜன்,25, சதீஷ்,28, வசந்தகுமார்,27, மணிவண்ணன்,28, ஆகியோர், 2019ல் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சி.பி.ஐ., முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சாட்சி விசாரணைக்கு கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐந்து பேரும் பல்வேறு கால கட்டங்களில் ஜாமின் கேட்டு, தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு, ஆன்லைன் வாயிலாக மீண்டும்ஜாமின் மனு தாக்கல் செய்தார். '465 நாட்களாக தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ஜாமினில் விடுவிக்க வேண்டும்' என்று, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.விசாரித்த நீதிபதி ராதிகா, மனுவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE