ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகருக்குள் போக்குவரத்தை குறைக்கும் வகையில் திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன்கோட்டையில் இருந்து அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, பழநிக்கவுண்டன்புதுார், அரசப்பபிள்ளைபட்டி வழியாக பழநி ரோட்டை இணைக்கும் வகையில் பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரோட்டில் ரயில்வே மேம்பாலப் பணிகள் இன்னும் முற்றுப் பெறாத நிலையில் வாகன போக்குவரத்து நடக்கிறது. வாகனங்கள் வேகமாக செல்வதால் திண்டுக்கல் ரோட்டில் இருந்து பைபாஸ் ரோட்டிற்கு திரும்பும் போதும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இங்கு இன்னும் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் இருப்பதால், இரவு நேரத்தில் ரோட்டின் நிலை குறித்து தெளிவாக அறிய முடியாமல் வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர். இப் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க பொருட்கள் வந்து பல நாட்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த இடத்தில் வாகனங்கள் விபத்தின்றி செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE