தேனி:தேனி மாவட்டம் வருஷநாடு அருகே தும்மக்குண்டை சேர்ந்த 30 தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்ப வழியின்றி உ.பி.,யில் தவிக்கின் றனர்.
தும்மக்குண்டை சேர்ந்த இவர்கள் உ.பி.யில் ஈடாக் மாவட்டத்தில் ஆறு ஆண்டுகளாக ஓட்டல் வேலை, பிளாட்பார உணவகங்கள் நடத்துகின்றனர். பலர் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். கொரோனாவால் தெருவோர கடைகள் செயல்பட முடியவில்லை. மதியம் ஒரு மணிவரை மட்டுமே ஆட்கள் சென்றுவர அனுமதிக்கப்படுகிறது. இதனால் வேலை இல்லாததால் தவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட சங்கர் அலைபேசியில் கூறுகையில், '' இங்கு அரசின் நிவாரணம் கிடைக்க வில்லை. பசி, பட்டினியால் தவிக்கிறோம். ஊரடங்கில் முடங்கி சொந்த ஊர் திரும்ப உ.பி., ஈடாக், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் இணையதளத்தில் விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை. வீட்டு வாடகை ரூ.9,500 செலுத்த வழியில்லை. வெளிமாநில தொழிலாளர்கள் மீட்பில் எங்களையும் மீட்க உதவ வேண்டும்,''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE