நத்தம்:வாகன கடன் மற்றும் சுய உதவி குழு கடன்களை செலுத்த கால அவகாசம் தேவை என நத்தம் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து நத்தம் தாலுகா அலுவலகத்தில் அண்ணா ஆட்டோ நிலைய தொழிலாளர்கள் கொடுத்த மனு:நத்தம் பஸ்ஸ்டாண்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாடகை ஆட்டோவை நம்பி பிழைக்கிறோம்.
ஊரடங்கு சூழலில் நாங்கள் வாங்கிய வாகன கடன் மற்றும் சுய உதவிக்குழு கடன்களை கேட்டு அதிக அழுத்தம் தரப்படுகிறது. சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலையில் கடன்களை செலுத்த முடியவில்லை. கடனை திருப்பி செலுத்த 2 மாத அவகாசம் வழங்க வேண்டும், என கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE