விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொரோனா சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி மாவட்டத்தில் செயல்படும் 126 குழுக்களுக்கு 1.08 கோடி ரூபாய் கடன் உதவிகளை வழங்கினார்.பின்னர், அவர் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கடன் தேவைகள் மற்றும் அவசர தேவையினை பூர்த்தி செய்ய ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை 6 மாதங்கள் திருப்பி செலுத்த தேவையில்லை' என்றார்.கலெக்டர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ., சக்கரபாணி, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், மாவட்ட மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி ரகுராமன், முன்னாள் நகர மன்ற சேர்மன் பாஸ்கரன், கூட்டுறவு நகர வங்கி துணைத் தலைவர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE