சத்தியமங்கலம்: பவானிசாகரில் பலத்த சூறாவளியால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலம், பசுவபாளையம், தயிர்பள்ளம் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள், வாழை சாகுபடி செய்துள்ளனர். தற்போது குலை தள்ளிய நிலையில், நேற்று முன்தினம் இரவு வீசிய, பலத்த சூறாவளி காற்றால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், இக்கிராமங்களில் முற்றிலும் வேருடன் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஏற்கனவே, கொரோனாவால் வாழைக்காய், வாழைப்பழங்களை வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு முழுமையாக அனுப்ப முடியாமல், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தால், விவசாயிகளின் கவலை அதிகரித்துள்ளது. சேதமடைந்த வாழை மரங்களை பார்வையிட்டு, உரிய நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE