ராசிபுரம்: ராசிபுரம், மேம்பாலம் அருகே சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராசிபுரம் நகராட்சிக்கு சேலம், நாமக்கல் வழியாக வரும் இரண்டு சாலைகளுக்கு இடையே ரயில் பாதை செல்கிறது. இதனால், இரண்டு சாலைக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாமக்கல் சாலையில் உள்ள மேம்பாலம் தொடங்கும் இடத்தில், கோவில் இருந்ததால், சாலை வளைவாக இருந்தது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன், இந்த சாலையை அகலப்படுத்தி விட்டனர். அதேபோல், நாமக்கல் சாலையும் குறுகலான வளைவு பகுதியில் இருந்ததால் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கின. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சேலம் சாலையில் உள்ள மேம்பாலம் முடிவில், சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. ஐந்து அடி சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. சாலை சரிந்து விடாமல் இருக்க சிமென்ட் கான்கிரீட் அமைக்கும் பணியும், அதற்கு மண் கொட்டும் பணியும் நடந்து வருகிறது. ஊரடங்கால் போக்குவரத்து குறைவாக இருப்பதால், இப்பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE