குளித்தலை: 'குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவப் பணியாளர்களுக்கு, 'என்-95 மாஸ்க்' பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நாள்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த கல்லூரி மாணவியர் உள்பட, ஒன்பது பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது போல், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ரிசல்ட் வரும் வரை, தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆனால், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அவர்கள் வார்டில் இல்லாமல் வெளியில் சுற்றித்திரிவதால் மருத்துவ பணியாளர்களும், செவிலியர்களும் அச்சத்தில் உள்ளனர். மேலும், கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவ பணியாளர்களுக்கு, 'என்-95 மாஸ்க்' மற்றும் பாதுகாப்பு உடை ஆகியவற்றை வழங்க வேண்டுமென, மருத்துவ பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE