கரூர்: கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், சி.ஐ.டி.யு., நிர்வாகி ஜீவானந்தம் தலைமையில், ஆர்.எம்.எஸ்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் நலச்சட்டங்களை, மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்து செய்ய முயற்சி செய்வதை கண்டித்தும், எட்டு மணி நேர வேலையை, 12 மணி நேரமாக உயர்த்துவதை கண்டித்தும், பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வுகளை நிறுத்துவதையும், நிலுவை தொகையை மறுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் முருகேசன், ராஜசேகர், பால்ராஜ், தண்டபாணி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE