விருத்தாசலம்; தீ விபத்தில் பாதித்த குடும் பத்திற்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை வழங்கினார்.விருத்தாசலம் அடுத்த பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் 35, என்பவரது கூரை நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்து, முற்றிலும் சேதமடைந்து.தகவலறிந்த கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நேற்று தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு, நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.ஊராட்சி தலைவர் சிவபெருமான், துணை தலைவர் முருகன், ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் மற்றும் செல்வகணபதி உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE