புதுச்சேரி; காலாப்பட்டு சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு ஹோமியோபதி மருந்தான 'ஆர்சனிக் ஆல்பம்' வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, சுகாதார மேற்பார்வையாளர் ஷகிலா வரவேற்றார். மருத்துவ அதிகாரிகள் பிரதீப குமார், மோனிஷா, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.முத்தியால்பேட்டை ஹோமியோபதி மருத்துவர் தனலட்சுமி தலைமை தாங்கி, வீடு வீடாக சென்று ஹோமியோபதி மருந்தான 'ஆர்சனிக் ஆல்பம்' மாத்திரைகளை வழங்கினார்.சுகாதார உதவி ஆய்வாளர்கள் சந்தனவதி, மதியழகன், கிராமப்புற செவிலியர் விருதாம்பாள், ஹோமியோபதிஉதவியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE