திருப்பூர்:மாநிலம் முழுவதும் மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான நீதிபதிகள் 28 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மகிளா கோர்ட் நீதிபதிகள், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட 28 பேர், வேறு மாவட்டங்களில் உள்ள கோர்ட்களுக்கு இடமாற்றம் செய்து, ஐகோர்ட் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கோகிலா, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், அங்கு பணியாற்றிய, இளங்கோவன், மதுரை மகளிர் நீதிமன் றத்துக்கு மாற்றப்பட்டார். நாகப்பட்டினம் குடும்ப நல கோர்ட் நீதிபதி கோவிந்தராஜன், திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE