திருப்புல்லாணி:திருப்புல்லாணி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் மல்லல், பனையடியேந்தல், நல்லிருக்கை, எக்ககுடி, லாந்தை கிராமங்களில் கூட்டு பண்ணைய குழுக்கள் உள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் 20 விவசாயிகள் உள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது.பனையடியேந்தலில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் சேக் அப்துல்லாதலைமை வகித்தார்.
வேளாண்மை உதவி இயக்குநர் அமர்லால் முன்னிலை வகித்தார். குழுவினரின் பங்குத்தொகையாக ரூ.2 லட்சத்து10 ஆயிரமும், அரசு மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவருக்கு ஓராண்டுக்கு இந்த டிராக்டரை குத்தகைக்கு விட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE