சோழவந்தான்,சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கண்மாய் கரையோரம் சாய்ந்து வரும் மின் கம்பங்களால் விபத்து அபாயம் உள்ளது.
கடந்தாண்டு நகரி-குமாரம் ரோடு பணி நடந்த போது இக்கண்மாய் கரையில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. அப்போது மின் கம்பங்கள் உள்ள இடத்தை சரி செய்யாமல் சுவர் கட்டப்பட்டது. இதனால் ஏழு மின் கம்பங்கள்ரோடு பக்கம் சாய்ந்து வருகின்றன. பலத்த காற்று வீசினால் விழும் அபாயம் உள்ளதால்மக்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். மின் கம்பங்களை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE