பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, 22 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, காரில் கடத்தி சென்று மிரட்டிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுாரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50. தொழிலதிபரான இவரிடம், எசனை பாப்பாங்கரையை சேர்ந்த சுரேஷ், 32, என்பவர், குறைந்த விலையில், தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி, 22 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். பின், தங்கம் வாங்கித் தராமல், பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்துள்ளார். இதுபற்றி, ஆன்லைனில் ரவிச்சந்திரன் புகார் செய்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், ரவிச்சந்திரனும், ௨௪ முதல், ௪௭ வயதுடைய வேறு மூன்று பேரும் சேர்ந்து, 4ம் தேதி சுரேஷை, திண்டுக்கல்லுக்கு காரில் கடத்திச் சென்றனர்.
அங்கு அவரை மிரட்டி, வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விடுவித்துள்ளனர். இது குறித்து, சுரேஷ் கொடுத்த புகார்படி, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, ரவிச்சந்திரனையும் மற்ற மூவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE