மானாமதுரை:மானாமதுரை அருகே 6 கிராமங்களில் உள்ள 700 ஏக்கர் பாசன வசதி வழங்கும் சுப்பன்கால்வாய் மதகுப்பகுதி, வரத்துக் கால்வாயை துார்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை அருகே பெரியகோட்டை, வேம்பத்துார் பகுதிகளில் சேரும் மழைநீர் வேலுார் கிராமம் அருகே உப்பாறாக உருவாகி ஓடி வருகிறது.வேலுார் உப்பாற்றில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு பெரியகோட்டை, செய்களத்துார் வரை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் செய்களத்துார் தடுப்பணையில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்துகால்வாய் மூலம் 20க்கும் மேற்பட்ட பெரியகண்மாய்கள், 30க்கும் மேற்பட்ட சிறிய குளங்களில் நிரம்பிய பின் இளையான்குடி கண்மாய்க்கு செல்லும் வகையில் நீர்வழித்திட்டம் தயாரிக்கப்பட்டு தடுப்பனை கட்டப்பட்டுள்ளது.
தற்போது ஸ்பிரிங் ஷட்டர்கள் பழுதடைந்துள்ளது.வரத்துகால்வாய் துவங்கும் இடம் முதல் செய்களத்துார் வரை கால்வாயில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கண்மாய்களுக்கு வந்து சேராமல் வீணாகும் நிலை உள்ளன. இதனை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE