பெரியகுளம்:தாமரைக்குளம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை பாம்பாறு கரையோர பகுதிகளில் கொட்டப்படுவதால் மாசுபடுகிறது.
கும்பக்கரையிலிருந்து வெளியேறும் நீர், சிற்றோடைகள் வழியாக பாம்பாற்றில் கலக்கிறது. இதனால் பாம்பாற்றைச் சுற்றி நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், பங்களாபட்டி பகுதிகளில் சேரும் குப்பையை, பேரூராட்சி பாம்பாற்றிலும், கரைப்பகுதியில் கொட்டுகிறது. இதன் காரணமாக ஆறு மாசுபடுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.--
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE