திருத்தணி : தாயம் விளையாடியதை கண்டித்த டிராக்டர் ஓட்டுனர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தப்பியோடிய, மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி அடுத்த, குமாரகுப்பம், அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரகு, 40. டிராக்டர் ஓட்டுனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் பாபு மகன் விக்கி, 20. இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாட்களாக, ரகு வீட்டின் முன் விக்கி, நண்பர்களுடன், இரவு நேரத்தில் தாயம் விளையாடி வந்தார்; இதை ரகு கண்டித்தார்.இதனால், ஆத்திரமடைந்த விக்கி, நண்பர்கள் இருவருடன், நேற்று மாலை, ரகு வீட்டிற்கு சென்றார். அப்போது, ரகு வீட்டின் முன் நின்றிருந்த போது, விக்கி காய்கறி அறுக்கும் கத்தியால், ரகுவை பல இடங்களில் குத்தினார்.பின், மூன்று பேரும், தப்பி ஓடி விட்டனர். ரகு சம்பவ இடத்திலேயே இறந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE