காசிமேடு : மின்சாரம் பாய்ந்து, வட மாநில தொழிலாளி பலியானார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமீர்தாஸ், 42. இவர், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் தங்கி வேலை பார்த்தார். நேற்று அதிகாலை, துாங்கி எழுந்து, மின்விசிறியை நிறுத்த, சுவிட்ச்சில் கை வைத்து உள்ளார்.அப்போது, மின்சாரம் பாய்ந்து, சமீர்தாஸ் துாக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவர் உயிர் இழந்தார். இது குறித்து, காசிமேடு மீன்பிடித்துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர்.வட மாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE