ஈரோடு: ஈரோட்டை ஏமாற்றிய மழை, அம்மாபேட்டையில் அதிகபட்ச மாக பெய்தது. ஈரோடு மாவட்டத்தில், அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மதியம், 2:00 மணிக்கு பின், வீட்டை விட்டு வெளியில் வரவே மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஈரோட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மின்னல் அடித்து, பலத்த காற்றும் வீசியது, மழை வருமென மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில், 16.8 மி.மீ., மழை பெய்தது. தாளவாடியில், 5, சென்னிமலையில், 14, வரட்டுப் பள்ளத்தில், 2.8 மி.மீ., மழை பதிவானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE