புன்செய்புளியம்பட்டி: வன விலங்குகள் வேட்டையாடி மிஞ்சிய, புள்ளி மான் தலையை தூக்கி சென்ற, ஆறு பேரை கைது செய்து, வனத்துறையினர் அபராதம் விதித்தனர். தாளவாடி வனச்சரகம், திகினாரை பிரிவு, கோடம்பள்ளி வனப்பகுதியில், தாளவாடி ரேஞ்சர் சிவக்குமார் தலைமையில், ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். கோடம்பள்ளி வனத்தில் திரிந்த, ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில், புள்ளிமான் தலை இருந்தது. விசாரணையில் கோடம்பள்ளி பழங்குடி கிராமத்தை சேர்ந்த பசுவண்ணா, குன்னீரான், நஞ்சப்பன், சுப்பிரமணி, மாரன், வேலுசாமி என்பது தெரிந்தது. விலங்குகள் வேட்டையாடியதில் மீதமிருந்த, புள்ளி மான் தலையை சாக்குப்பையில் போட்டு, தூக்கி சென்றதும் தெரிந்தது. ஆறு பேரையும் கைது செய்த வனத்துறையினர், தலா, 25 ஆயிரம் என, 1.50 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE