ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், பேரேஜ் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 35; இவரின் மாமா ராஜேந்திரன், சின்னியம்பாளையத்தில் உள்ளார். அவரை சந்திக்க செல்லும்போது, அவரின் மகள் அனிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு அனைத்து மகளிர் போலீசில், ராஜேந்திரன் மனைவி புகார் தரவே, விசாரித்த போலீசார், பாலசுப்பிரமணியத்தை எச்சரித்து அனுப்பினர். கடந்த, 21ம் தேதி இரவு மாமா வீட்டுக்கு பாலசுப்பிரமணியம் சென்றார். இதையறிந்த பாலசுப்பிரமணியத்தின் உறவினரும் திருநங்கையுமான சூர்யா, ராஜேந்திரன் வீட்டு கதவை தட்டினார். அப்போது வெளியில் வந்த பாலசுப்பிரமணியம், ராஜேந்திரனை கட்டையால் தாக்கியுள்ளார். சூர்யாவுக்கு உதவியாக திருநங்கைகளான நிரஞ்சனா, மோனிகா, தேஜஸ்ஸ்ரீ மற்றும் மனோஜ்குமார் வந்துள்ளனர். சத்தம் கேட்டு கூடிய மக்களை, திருநங்கையர் மிரட்டியுள்ளனர். காயமடைந்த பாலசுப்பிரமணியம் புகாரின்படி, பி.பெ.அக்ரஹாரம் மனோஜ்குமார், ஈரோட்டை சேர்ந்த திருநங்கை தேஜஸ்ஸ்ரீ ஆகியோரை, மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE