கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கல் கடத்திச்சென்ற டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி, தாசில்தார் தண்டபாணி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், கே.ஆர்.பி., அணை கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதியின்றி ஒரு யூனிட் கல்லை எடுத்து செல்வது தெரிந்தது. டிரைவர் தப்பியோடி விடவே, டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவேரிப்பட்டணம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE