கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், வீட்டிலிருந்து வெளியே சென்ற தனியார் கல்லூரி மாணவி மாயமானார். கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்த, 18 வயது கல்லூரி மாணவி, திருச்செங்கோடு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 21 மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தந்தை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எந்த தகவலும் கிடைக்காத நிலையில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில், கிருஷ்ணகிரி பவர் ஹவுஸ் காலனியை சேர்ந்த தனியார் சூப்பர் மார்க்கெட் ஊழியர் மோகன், 20, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவி மற்றும் மோகனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE