கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி ஸ்டேஷன் எஸ்.ஐ., விதுன்குமார் தலைமையிலான போலீசார், கல்லாவி சாலையில் உள்ள சுப்பிரமணி நகர் பஸ் நிறுத்தம் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த போது, கல்லாவி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த சண்முகம், 52, என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 24 லாட்டரி சீட்டுகள் மற்றும் 2,700 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த குமாரவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE