ஈரோடு: சித்தோடு மார்க்கெட்டில், 60 நாட்களுக்கு பின் வெல்லம் ஏலம் துவங்கியது. கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச், 24 முதல், ஈரோடு மாவட்டம், சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில், சனிக்கிழமை தோறும் வெல்லம் ஏலம் நடக்கவில்லை. இயல்பு நிலை திரும்பும் நிலையில், நேற்று மீண்டும் ஏலம் துவங்கியது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் வந்தனர். வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்தது. இருப்பினும் அந்தந்த மாவட்டங்களில் ஏலத்தில் பங்கேற்க, வியாபாரிகளுக்கு அனுமதி பெற்றவர்கள் பங்கேற்றனர். 30 கிலோ எடை கொண்ட, ஒரு மூட்டை அச்சு வெல்லம், 1,000 மூட்டை வரத்தானது; மூட்டை, 1,100 ரூபாய் முதல், 1,170 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 6,000 மூட்டை வரத்தாகி, 1,050 ரூபாய் முதல், 1,170 ரூபாய் வரை விற்பனையானது. நாட்டு சர்க்கரை, 2,000 மூட்டைகள் வரத்தாகி, 1,100 ரூபாய் முதல், 1,200 ரூபாய் வரை ஏலம் போனது. கடந்த, 60 நாட்களாக ஏலம் இல்லை என்றாலும், வெல்லம் உற்பத்தி செய்யப்படும் இடங்களில், நேரடியாக வியாபாரிகள் வந்து வாங்கி சென்றனர். இதை ஒப்பிடுகையில் ஏலத்தில் மூட்டைக்கு, 60 ரூபாய் வரை விலை குறைந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE