ஆத்தூர்: ஆத்தூர் அருகே, 'கிணற்றை காணவில்லை' என, நடிகர் வடிவேலு பாணியில் புகார் சென்றதால், மக்கள் மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், பைத்தூர் ஊராட்சி, நைனார்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம், 52; 'பொது கிணற்றை காணவில்லை. கிணறு இருந்த இடத்தில் கோவில் கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது' என, ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு தந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள், நைனார்பாளையம் - பைத்தூர் சாலையில், நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் ஊரக போலீசார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 'கடந்த, 20 ஆண்டாக தண்ணீரின்றி, குப்பை கொட்டி வந்த கிணற்றை மூடிதான் கோவில் கட்டப்படுகிறது. வேண்டுமென்றே சிலர் புகார் அளிக்கின்றனர்' என, அதிகாரிகள் கூறவே, மக்கள் சிரித்தபடி கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE