வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டால், சிறையிலுள்ள அவரது மனைவி நளினியை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கடந்த, 1 முதல் முருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று, 11வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இது குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தொடர் உண்ணாவிரதத்தால், முருகனின் உடல்நிலை சோர்வடைந்தது. இதனால், அவருக்கு நேற்று முன்தினம் இரண்டு பாட்டில், நேற்று ஒரு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. மருத்துவக்குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement