வேலூர்: வேலூர் மாவட்டத்தில், வளைகாப்புக்கு வந்தவர்கள் உள்பட, 11 பேருக்கு கொரோனா பாதித்ததால், மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை, 133 ஆக உயர்ந்துள்ளது. வேலூர், சேண்பாக்கத்தில், 20 வயதுள்ள கர்ப்பிணிக்கு, கடந்த வாரம் வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரியவே, பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனால், வளைகாப்புக்கு வந்த, 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சேண்பாக்கம் பகுதியில், 25, 30, 38, 40 ஆகிய வயதுள்ள பெண்கள் மற்றும் வேலூர் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, 30 வயதுள்ள பெண் போலீஸ், குடியாத்தம் தர்ணம்பேட்டையில், 25, 30, 40 ஆகிய வயதுள்ள பெண்கள், வேலூர் சைதாப்பேட்டையில், 60, 65 ஆகிய வயதுள்ள ஆண்கள் என, 11 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள், வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை, 133 ஆக உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE