திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நேற்று மேலும், 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 567 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்துக்கு, வெளி மாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து வருவோரை, மாவட்ட எல்லையில் கண்டறிந்து, தனிமைப்படுத்தி பரிசோதனை செய்கின்றனர். இதில், நேற்று முன்தினம் வரை, 548 பேருக்கு கொரோனா தொற்று பாதித்த நிலையில், நேற்று, மேலும், 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, 567 ஆக உயர்ந்துள்ளது. இதில், 326 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement