கோவை : கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை, 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, டீன் காளிதாஸ் தெரிவித்தார்.
நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், கொரோனாவுக்கு சேகரிக்கப்படும் சளி மற்றும் ரத்த மாதிரிகள், ஆரம்ப காலத்தில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள, மைக்ரோ பயாலஜி ஆய்வகத்தில் தான், பரிசோதனை செய்யப்பட்டது.தினமும், 500 முதல் 800 மாதிரிகள் வரை, பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின், அந்தந்த மாவட்டங்களில் பிரத்யேக ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
கோவை அரசு மருத்துவமனையில், ஆர்.டி.பி.சி.ஆர்.,முறையில், பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பின்னர், ஆய்வு முடிவுகள் 6 முதல் 7 மணி நேரத்திற்குள் கண்டறியப்படுகிறது. இந்த ஆய்வகத்தில், துறை தலைவர் மைதிலி தலைமையிலான, 8 டாக்டர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்கள் அடங்கிய குழுவினர், இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை, 15 ஆயிரத்து 26 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில், 357 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் தினமும், 200க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. ஆய்வகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, 4 நாட்களுக்கு பின் ஓய்வு அளிக்கப்படுகிறது. இதுவரை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 24 மணி நேரமும் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.-காளிதாஸ்டீன், கோவை அரசு மருத்துவமனை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE