சேலம்: முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலால், தொற்று அபாயம் ஏற்பட்டுவிடுமோ என, வாகன ஓட்டிகள், தங்கள் மனதில் நெருடலுடன் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில், இரு ஆண்டுக்கு மேலாக, ரயில்வே மேம்பால கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் பணியால், அங்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு மாதத்துக்கு மேலாக, போக்குவரத்து இல்லாத நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால், இப்பகுதியில் வாகனங்களின் இயக்கம் அதிகரித்துள்ளது. அரசு கலைக்கல்லூரி பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் பாதையில், இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. ஏராளமான வாகனங்கள் செல்வதால், மீண்டும் பழையபடி, போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. அத்துடன், சமூக இடைவெளியின்றி, மிக நெருக்கமாக நின்றும், ஊர்ந்தும் செல்லும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால், இதை பழையபடி ஒரு வழிப்பாதையாக மாற்றி, போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE