கெங்கவல்லி: ஒதியத்தூரில், மக்களுக்கு இடையூறாக உள்ள நான்கு சந்துக்கடைகளை அகற்றக்கோரி, ஆய்வுக்கு வந்த கலெக்டர் ராமனிடம், மக்கள் மனு அளித்தனர். கெங்கவல்லியில், சேலம் கலெக்டர் ராமன் தலைமையில் அலுவலர்கள், நேற்று, குடிமராமத்து பணி, கொரோனா பரிசோதனை, தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்தனர். ஒதியத்தூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தபோது, அப்பகுதி மக்கள், 'எங்கள் ஊரில், 5 ஆண்டாக, நான்கு இடங்களில் சந்துக்கடை வைத்து, மதுபானம் விற்பதால், மக்களுக்கு இடையூறாக உள்ளது. சந்துக்கடைகளை அகற்ற வேண்டும்' என, மனு அளித்தனர். அதேபோல், அதே ஊரைச் சேர்ந்த முதியோர், மாற்றுத்திறனாளி உதவி பெறும் பயனாளிகள், 'மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் பணியாளர், தலா, 30 ரூபாயை பிடித்துக்கொண்டு, 970 ரூபாய் மட்டும் வழங்குகிறார்' என புகார் அளித்தனர். அவர்களிடம், புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE