சென்னை : 'முன்பு செய்த தவறில் இருந்து பாடம் கற்காமல், மீண்டும் அதே தவறை, அரசு செய்கிறது' என, கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் அறிக்கை:வெளிநாட்டில் இருந்து வருவோர் வழியாக, கொரோனா பரவுகிறது என்றால், விமான நிலையத்திலேயே அவர்களுக்கு பரிசோதனைகள் செய்திருந்தால், இந்த நீண்ட ஊரடங்கை, நாம் எதிர்கொண்டிருக்க வேண்டாம். இந்த ஒட்டுமொத்த தவறுக்காக, தமிழகம், 68 நாட்கள் ஊரடங்கில் இருந்து, இப்போது தான் மெதுவாக மீளத் துவங்கியுள்ளது.முன்பிருந்த நிலையை அடையவே, இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என, தெரியாது. பல ஆண்டுகள், நம் பொருளாதார நிலையை பின்னுக்கு தள்ளியுள்ளது, இந்த நுண்ணுயிரி.
அலட்சியம்
மக்கள் ஒத்துழைப்பு
இந்த நேரத்திலாவது, அரசு என்ன தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பதையும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு, எவ்வளவு முக்கியம் என்பதையும், மக்களுக்கு அரசு விளக்க வேண்டியது கடமையாகும். இதை கட்சித் தலைவனாக கேட்காமல், ஒரு சாமானியனாக கேட்கிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE