உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வாகன ஓட்டிகளின் வசதிக்காக கட்டப்பட்டுள்ள பாத்ரூம் மற்றும் கழிவறை திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது.
உளுந்துார்பேட்டை அருகே செங்குறிச்சி டோல்கேட்டைக் கடந்து தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் அடிப்படை தேவைகளைக் கருதி, மத்திய அரசு நிதி மூலம் பயணிகள் நிழற்கூடை, குடிநீர் குழாய் மற்றும் டோல்கேட் அருகே இரு புறங்களிலும் கழிவறை மற்றும் குளியலறை கட்டடம் தனியாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால், செங்குறிச்சி டோல்கேட் அருகே உள்ள குளியலறை மற்றும் கழிவறைக் கட்டடம் கட்டி கட்டி ஓராண்டாகியும் திறக்கப்படாமல் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது.
இந்த கட்டடம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் டோல்கேட் நிர்வாகமும் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கழிவறையை பயன்படுத்த வந்தால் பூட்டியிருப்பதைப் பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே, காட்சிப் பொருளாக உள்ள செங்குறிச்சி டோல்கேட் குளியலறை மற்றும் கழிவறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE