பரமக்குடி:பரமக்குடியில், மாலை 5:00 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 300யை கடந்து சென்றுள்ளது. பரமக்குடியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிவது, கை கழுவுவது உள்ளிட்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
இதே போல் சில கடைகளில் இச்செயல் முறைகளை மறந்துள்ளனர். தொடர்ந்து வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் இன்று தொடங்கி ஜூன் 30 வரை மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE