வீரபாண்டி: மாவட்ட எல்லையை, நான்கு சக்கர வாகனங்களில் விதி மீறி கடப்பவர்களை தடுக்க, உள்ளூர் சாலையை, மக்கள் தடுப்பு வைத்து அடைத்துள்ளனர். சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை, மருளையம்பாளையத்தில், ஆட்டையாம்பட்டி போலீசார், சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். அதேபோல், நாமக்கல் மாவட்டம், மல்லசமூத்திரம் போலீசார், காளிப்பட்டியில் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். அவர்கள், வருவாய்த்துறையினர் உதவியுடன், 24 மணி நேரமும் கண்காணித்து, இ - பாஸ் அனுமதி உள்ள வாகனங்களை மட்டும், மாவட்டத்துக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். சில வாகன ஓட்டிகள், இ - பாஸ் இல்லாமல், விதிமீறி, மாவட்டத்துக்குள் செல்ல, மருளையம்பாளையம் ஊருக்குள் நுழைந்து, காளிப்பட்டி கந்தசாமி கோவில் வழியாக நாமக்கல் மாவட்டத்துக்குள் செல்கின்றனர். இதனால், உள்ளூர் மக்கள், தங்கள் பகுதியில் தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதால், அச்சாலைகளில் தடுப்புகளை வைத்து, இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவர வழிவிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE