ஈரோடு: கொரோனா வைரஸ், ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. நாள்தோறும் தொற்று பாதிப்பு வருகிறது. இதனால் வணிகர்கள் கடை திறக்கும் நேரத்தை குறைத்து கொண்டுள்ளனர். இச்சூழலில் முகக்கவசம் அணியாமல், பலர் சாலைகளில் நடமாடுகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு, போலீசார் அபராதம் விதிக்கின்றனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில், முகக்கவசம் அணியாமல் சென்றதாக, 965 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாத, 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உத்தரவை மீறி சென்றதாக, 80 டூவீலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் முகக்கவசம் அணியாமல் செல்வது, ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதது தொடர்பான வழக்கு, அபராதம் விதிப்பது அதிகரிக்கும் என்று, போலீசார் எச்சரித்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement