நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடைகளின் திறப்பு நேரம் குறைக்கப்பட்டது அமலுக்கு வந்தது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மெகராஜ் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., அருளரசு, டி.ஆர்.ஓ., துர்காமூர்த்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பெரியசாமி, செயலாளர் ஜெயக்குமார் வெள்ளையன் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர். கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில், இரவு, 8:00 மணிக்கு அடைக்க வேண்டிய நிறுவனங்களை, மாலை, 5:00 மணிக்கு மூடுவது என, முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நாமக்கல் கடைவீதியில், நேற்று மாலை, 5:00 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சில கடைகள் மட்டும் திறந்திருந்தன
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE