பள்ளிபாளையம்: ஆவாரங்காடு பகுதியில், 34 லட்சம் ரூபாயில், புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஆவாரங்காடு, அக்னிமாரியம்மன் கோவில் பகுதியில், சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் மக்களும் மிகவும் அவதிப்பட்டனர். 'புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள், அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை விடுத்தனர். அவர், உடனடியாக, 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, சில நாட்களுக்கு முன் பணிகளை துவக்கி வைத்தார். தற்போது, புதிய சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று, நகராட்சி கமிஷனர் இளவரசன், பொறியாளர் சரவணன் ஆகியோர் சாலையின் அளவு, தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE