போபால்: காங்கிரஸ் - சீனா இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியுள்ளதாக பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் நட்டா பேசியதாவது: கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா - சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டில்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போதும், நாட்டை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது.

கடந்த 2005 - 06 ம் ஆண்டில், சீனாவும் சீன தூதரகமும், ராஜிவ் அறக்கட்டளைக்கு 300 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதி வழங்கியுள்ளது. இது தான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையே ரகசிய ஒப்பந்தம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE