புவனகிரி : கண்ணங்குடி பாசிமுத்தான் ஓடையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அண்ணா நடை பாலம் இடிந்துள்ளதை சரிசெய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீரப்பாளையம் ஒன்றியம், சிதம்பரம் - மதுராந்தகநல்லுார் வழியாக சேத்தியாத்தோப்பு செல்லும் சாலையில் கண்ணங்குடி பாசிமுத்தான் ஓடை உள்ளது. அங்கு 1960ம் ஆண்டு, விவசாயிகள் நலன் கருதி நடைபாலம் கட்டப்பட்டது.இதனால் கண்ணங்குடி வடக்குப்பகுதியில் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல், உளுந்து, பயிர் உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் தங்கள் பகுதிகளுக்கு எடுத்து வந்தனர். இப்பாலம் காலப்போக்கில் பராமரிப்பின்றி தடுப்புக்கட்டைகள் மற்றும் நடைபகுதிகள் முற்றிலும் சேதமடைந்தது.தானே புயலின் போது ஒரு பக்கம் முற்றிலும் இடிந்து சேதமானது.
அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விரக்தியடைந்த விவசாயிகள் வரி வசூல் செய்து இரும்பு பைப்பில் நடை ஏணி அமைத்து தற்காலிகமாக சரி செய்தனர். அந்த பாலமும் பழுதடைந்ததால், இங்கிருந்து எண்ணநகரம் வழியாக 7 கி.மீ., துாரம் வரை விவசாயிகள் சுற்றிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாலத்தை பார்வையிட்டு, அதனை புதிய நடைபாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE